பூஜை விமா்சனம் - poojai movie review



தாமிரபரணி படத்திற்கு பிறகு ஹாி இயக்கத்தில் விஷால்  நடித்திருக்கும் திரைப்படம் பூஜை. இதில் விஷாலுடன் முதன் முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடி சோ்ந்து கலக்கி இருக்கும் படம். மேலும் விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ”பூஜை”.

கூலிப்படையை நடத்திவரும் தாதா ஒருவனுக்கும், எதற்கும் துணிந்த தைரியசாலி ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் ஆகியவற்றை கலந்து சொல்லியிருப்பதே பூஜை.

கோயம்புத்தூரில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் ராதிகாவின் மகன் விஷால், பிரச்சனை ஒன்றின் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து சென்று, அவினாசி மார்க்கெட்டில் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்து வருகிறார். ஒரு சந்திப்பின்போது விஷாலுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாய் மாறுகிறது.

இன்னொருபுறம் அதே ஊரில் அறங்காவலர் பதவியில் இருந்து கொண்டே, மறைமுகமாக கூலிப்படையை நடத்தி வருகிறார் மனோஜ் திவாரி. அதோடு விஷால் குடும்பத்துக்கு சொந்தமான கோவில் நிலத்தையும் திட்டம்போட்டு பறிக்க முயல்கிறார். இதைத் தெரிந்து கொள்ளும் கோவில் நிர்வாகம் விஷாலின் சித்தப்பாவான ஜெயப்பிரகாஷை அறங்காவலர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கிறது. இதைத் தாங்க முடியாமல் மனோஜ் திவாரியின் ஆள் ஜெயப்பிரகாஷை தாக்க, மனோஜ் திவாரியின் வீடு புகுந்து அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்கிறார் விஷால்.

இதனால் அவமானமாகும் மனோஜ் திவாரி, விஷால் குடும்பத்தில் இருப்பவர்களை ஒவ்வொருவராக கொலை செய்யப்போவதாக சவால்
விடுகிறார். இந்த சவாலை விஷால் எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘பூஜை’.

படத்தில் விஷால் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸ் ஹீரோவிற்கான அந்தஸ்தை அதிகப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார்.

ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை… 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!

சூரி, பிளாக் பாண்டி இவர்கள் செய்யும் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. குறிப்பாக சூரியின் காமெடி அருமை. ராதிகா அழகான
கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட செய்திருக்கிறார். சத்யராஜ் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று மொட்டை தலையுடன் மிரட்டுகிறார்.

ஆக்ரோஷமான காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னதாண்டவம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படத்திற்கு கூடுதல் பலம் யுவனின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும்

மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சத்யராஜுக்கு பின்னணி இசை அருமை. ஆண்ட்ரியா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார்.

ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், ‘பூஜை’க்கு மாவிலை தோரணம்
கட்டியிருக்கின்றன.

ஹரியின் எழுத்து-இயக்கத்தில், ‘பூஜை’ படம் படு ஸ்பீடாக செல்வது, பூஜை படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.

ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் ”பூஜை” – ”ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!”

tags: Poojai review, poojai movie review, poojai stills, poojai new stills, பூஜை விமா்சனம், பூஜை திரைவிமா்சனம், பூஜை ஸ்டில்ஸ், தமிழ் சினிமா செய்திகள், விஷால், ஸ்ருதிஹாசன், இயக்குநா் ஹாி
Read more...
Share |

வடிவேலுவின் எலி நவம்பரில் தொடக்கம்


வைகை புயல் வடிவேல் கொஞ்சம் காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தாா். சமீபத்தில் வெளிவந்த தெனாலிராமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தாா். இந்த படத்தை இயக்கியவா் யுவராஜ். மீண்டும் இந்த கூட்டணியில் புதியதோரு படம் உருவாகயுள்ளது. ஆமாங்க! தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் - வடிவேல் கூட்டணியில் எலி படம் தயாராக உள்ளது. 

வடிவேல் நடிக்கும் எலி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதை எழுதும் பணியை இயக்குனர் யுவராஜ் முடித்துவிட்டார். இந்த கதை வடிவேலுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாம். வடிவேலு இந்த படத்தில் உளவாளியாக நடிக்கிறாராம். 1960-களில் நடக்கும் கதையாக உருவாகவிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளனர். தற்போது, வடிவேலுவுக்கு கதாநாயகி தேடும் பணி நடக்கிறது. மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வும் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஓஹோ பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராம்குமார் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலையையும், ராஜா முகம்மது எடிட்டிங்கையும் கவனிக்கிறார்கள்.





tags: vadivelu, latest news, vadivelu news, vadivelu next movie news, vadivelu stills, vadivelu stills in singaravelan, vadivelu comedy stills, vadively movie stills, vadivelu reaction stills, shreya vadively stills, தமிழ் சினிமா செய்திகள், வடிவேலு, வடிவேல் செய்திகள்,
Read more...
Share |

ஆபாச வீடியோவில் நானா? லட்சுமிராய் விளக்கம்


தமிழில் முன்னணி நடிகை ராய் லட்சுமியின் ஆபாச வீடியோ ஒன்றும் வெளியாகி திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்தூம், ‘முனி-2 காஞ்சனா’, ‘மங்காத்தா’,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ‘அரண்மனை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. இவருடைய ஆபாச வீடியோ ஒன்று நேற்று முன்னணி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரைப் பற்றிய வதந்திகள் லிவுட்டில் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. இவர், கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியுடன் காதலில் விழுந்தார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வந்தது. அதன்பிறகு, அது வெறும் வதந்தியே என்று அனைவருக்கும் தெரிய வந்தது.

இந்நிலையில், ராய் லட்சுமி பற்றி மேலும் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. ராய் லட்சுமி தோற்றத்தில் உள்ள பெண் தனது மேலாடையை அணிவது போன்ற 20 நிமிட வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் பரவலாக உலவி வருகிறது. இதைப் பார்த்த அனைவரும் அந்த வீடியோவில் இருப்பவர் ராய் லட்சுமிதான் என்று கூறிவருகின்றனர். இது திரையுலக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ராய்லட்சுமியிடமே கேட்டபோது, “இதுவரைக்கும் அந்த வீடியோவை நான் பார்க்கவே இல்லை. ஆனால், அதனைப் பார்த்த நண்பர்கள் அந்த வீடியோவில் தோன்றும் பெண் என்னுடைய முகத்தோற்றத்தை கொண்டவர் போலவே இருக்கிறார் என்று கூறினார்கள்.

அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், புத்திசாலித்தனமாக அந்த பெண்ணின் முகத்தை முழுவதுமாக அந்த வீடியோவில் காண்பிக்கவே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் அந்த பெண் திருமணமான பெண்கள் அணிந்திருப்பதுபோல காலில் மெட்டி அணிந்துள்ளார்.

என்னைப் போன்ற முக அமைப்பு கொண்ட ஒருவா் என்று கூறி சமாளித்து வந்தாலும், அந்த வீடியோவில் இருப்பது ராய் லட்சுமிதான் என்று பேஸ்புக், டுவிட்டா் மற்றும் வாட்ஸ் அப்பில் ஆயிரக்கணக்கானோா் கமெண்ட் அடித்துள்ளனா். மேலும் அந்த ஆபாச வீடியோவில் ராய் லட்சுமியுடன் இருப்பது பிரபல இயக்குநா் ஒருவா் என்றும் பலா் கமெண்ட் அடித்துள்ளதால் ராய் லட்சுமி அதிா்ச்சி அடைந்துள்ளாா். 

நான் நீண்டநாளாக சினிமாவில் இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை சமாளிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்த வீடியோவால்
முதல் முறையாக சிறிது பதற்றம் அடைந்துள்ளேன்” என்று கூறினார்.

tags: lakshmi rai news, lakshmi rai latest news, lakshmi hot stills, lakshmi rai new stills, தமிழ் சினிமா செய்திகள், ராய் லட்சுமி அடுத்த படம்,
Read more...
Share |

குத்து நடிகை 2 மாதமாக மாயமா?


குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவா் ரம்யா. அதனை தொடா்ந்து பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார்.


பின் நடிப்பதிலிருந்து விலகி கர்நாடக அரசியலிலும் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவருக்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட்டது.

முதலில் மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். பின் மீண்டும் ஆறு மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் மனம் உடைந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தார்.

‘ஆர்யன்’ என்ற கன்னட படத்தில் மட்டும் நடித்தார். அப்படம் ரிலீசாகி விட்டது. அடுத்து புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

பிறகு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகுதான் அவரை காணவில்லை என்கின்றனர்.

டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம். கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து டுவிட்டரிலும் அவர் வரவில்லை.

அரசியல் நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள் போன்றவற்றிலும் பங்கேற்கவில்லை. வீட்டிலும் அவர் இல்லை என்கிறார்கள். ரம்யா எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது மர்மமாக இருக்கிறது.

tags: ramya stills, ramya latest stills, ramya hot stills, ramya latest news, தமிழ் சினிமா செய்திகள், ரமயா லேட்டஸ்ட் செய்திகள்
Read more...
Share |

Tollywood Actress Isha New Stills

Tag: Tollywood Actress Isha New Stills,  Isha Latest Hot Stills, Isha New Spicy Photos, Actress Isha Latest Photo Gallery,  Isha Hot,
Read more...
Share |

அந்த போட்டோ பெரிய ஷாக்தான்: அனிருத்

ஏ.ஆர். ரகுமானுக்கு பிறகு முதல் படத்திலேயே எல்லா பாட்டும் ஹிட் கொடுத்து சாதனை படைத்தவர் அனிருத். இவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். ஒரு பக்கம் புகலும், மறுப்பக்கம் சர்ச்சையும், இவரை சுற்றி வருகின்றன.

ஆண்ட்ரியாவுக்கு இவர் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக பரவி அதிர்ச்சியளித்தது நம் அனைவருக்கும் தெரியும். இது குறித்து அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.

இதில் ” ’கொலவெறி வைரல்’னு இன்டர்நெட் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் நான். என்னை வளர்த்த அதே இன்டர்நெட் என் இமேஜை டேமேஜும் பண்ணுச்சு. எனக்கு அந்த போட்டோ பெரிய ஷாக்தான். ரொம்ப நொந்துட்டேன். எனக்கே அப்படின்னா, வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. ஆனா, கடவுள் புண்ணியத்துல வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க.

ரொம்ப ஆறுதலாப் பேசினாங்க. ரெண்டு நாள் உடைஞ்சுபோய் இருந்தேன். 'இது இன்டர்நெட் காலம். எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல பழைய மேட்டர்தான். நாளைக்கே வேற ஒரு விஷயம் வைரல் ஆச்சுன்னா, மக்கள் உன்னை மறந்துருவாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.”என்று கூறியுள்ளார்.
Read more...
Share |

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி


நடிகா் கமலஹாசன் தற்போது மலையாள பட ரீமேக்கான த்ரிஷியம் படத்தின் தமிழ் பதிப்பில் நடித்து வருகிறார். இதில் கமலஹாசன் மற்றும் நடிகர் கலாபவன் மணி கியோர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பாபநாச்ததி்ல நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் படத்தில் போலீஸ்காரராக நடிக்கும் கலாபவன் மணி, கமல்ஹாசனை தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து மூக்கில் அடிபட்டு வீங்குவதுபோல காட்சி முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மூக்குக்குள் ரப்பர் துண்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பில் நடந்த ஒத்திகையின்போது நடிகர் கலாபவன் மணி அடித்த போது கமலஹாசனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இந்த காட்சியில் கமல் நடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ரப்பர் துண்டு மூக்கிற்கு உள்பக்கமாக சென்று சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட, உடனடியாக அவரை தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எண்டாஸ்கோபி மூலம் ரப்பர் துண்டு அகற்றப்பட்டது.

இதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியாகினர். பின் அவர் நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்ததும் தான் பரபரப்பு அடங்கியது.

tags: kamalhasan news, tamil cinema news, kamal news. kamal latest news, kamal stills.தமிழ் சினிமா செய்திகள், கமல்ஹாசன், கமல் ஆஸ்பத்திாியில் அனுமதி
Read more...
Share |

கோபத்தில் சந்தானத்தை திட்டிய பிரபல டைரக்டா்

 
இந்த வாரம் இரண்டு முன்னனி வார இதழ்களில் சந்தானத்தின் பேட்டி வெளியாகி இருந்தன. அதில்  சந்தானமும், ரஜினியும் இருக்கும்
புகைப்படங்கள் இடைச்சொறுகலா வெளியாகி இருந்தன.  பிரத்யேமாக சந்தானத்திடம் வழங்கப்பட்ட லிங்காவின் புகைப்படங்களை படத்தின்
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரிடம் அனுமதி வாங்காமல் அவர் பிரஸ்க்கு வெளியிட்டுவிட்டாராம். இதனைத்தொடர்ந்து இந்த வாரம் வெளியான  வார இதழ்களில் அந்த ஸ்டில்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்காக பல்வேறு தரப்பில் இருந்த சந்தானத்திற்கு பாராட்டுகள் குவிந்தன. அதேநேரம் கடும் கோபமமைடந்தத கே.எஸ்.ரவிக்குமார் தனிப்பட்ட முறையில் அர்ச்சனையையும் அனுப்பி வைத்தாராம்.

இந்த நேரத்தில் இன்னொரு சம்பவம் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. லிங்கா படத்தில் ராதாரவியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரிடம் ஒரு பிரபல நாளிதழ் நிருபர் பேசிக்கொண்டிருந்த போது லிங்கா குறித்து  நிறைய விஷங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது சூட்டிங் ஸ்பாட்டில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிருபரிடம் அவர் காட்டியிருக்கிறாராம்.  அண்ணே ,,, இந்த படத்தில் ரஜினி எவ்வளவு இளமையாக இருக்கிறாா் அதனை கொடுத்தால் மக்களுக்கு காட்டிடலாம் என்று  நிருபர் கேட்டாரம். ஆனால் இயக்குனரின் அனுமதி இல்லாமல் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். இதுதான் மூத்த நடிகர்களுக்கும். இளைய நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம்..

Tags: santhanam news, santhanam latest news, K.S.Ravikumar, director K S. Ravikumar news,  சந்தானம், கே.எஸ்.ரவிகுமாா், தமிழ் சினிமா செய்திகள்
Read more...
Share |
Next Page